பணிநிரந்தரத்துக்கு பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் அமைச்சர்!

Published:

சென்னை:

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவரை பணி நிரந்தரம் செய்ய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெண் அதிகாரி மீனாட்சி கூறியபோது, பணி நிரந்தரம் தொடர்பாக அமைச்சர் சரோஜாவை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். அதற்கு அவர் ரூ.30 லட்சம் எனக்குத் தர வேண்டும் என்று கேட்டார். அப்படி லஞ்சம் கொடுக்க மறுத்ததால் என் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக விமர்சித்தார். மேலும் வேலையை விட்டு தானாக ஓடி விடு; இல்லாவிட்டால் உன் நடத்தை சரியில்லை என்று அசிங்கப்படுத்துவேன் என என்னை மிரட்டினார். சரோஜாவும் அவரது கணவரும் சேர்ந்து என்னை மிரட்டினர். நான் அங்கிருந்து உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் ஆளுநர் முதல் பிரதமர் வரை புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பெண் அதிகாரியை பெண் அமைச்சர் நடத்தை தொடர்பாக அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டியதாக செய்தி வெளியானது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img