December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

சிறைகளில் நடக்கும் தவறுகள்… சுட்டிக்காட்டி ஏடிஜிபி., சுற்றறிக்கை!அதிர்ச்சியில் அதிகாரிகள்!

puzhal prison - 2025

சிறைகளில் நடக்கும் தவறுகளை தோலுரித்துக் காட்டி ஏடிஜிபி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்! இதை அடுத்து, சிறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழக சிறைகளில் விதிமீறல், முறைகேடு நடப்பதாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறைத்துறை சரக துணைத் தலைவர்கள், மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள், சிறைத் துறை அலுவலர்களுக்கு தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி கனகராஜ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறையில் நடக்கும் முறைகேடுகள், தவறுகள், விதிமீறல்களுக்கு உயரதிகாரிகள் முதல் கடைநிலை காவலர் வரை உடந்தையாக இருப்பதாக சுற்றறிக்கையில் ஏடிஜிபி குறிப்பிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை சிறைத்துறை மட்டுமல்லாது காவல்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படுவது, விதிமுறைகளை மீறி பணம் பெற்றுக்கொண்டு உறவினர்களை அனுமதிப்பது, கைதியின் மனைவியிடம் காவலர் ஒருவர் தகாத உறவு வைத்திருப்பது என்று பல நிகழ்வுகளை ஏடிஜிபி தனது சுற்றறிக்கையில் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் சொந்த லாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் தவிர சிறைவிதிகளுக்கு புறம்பான செயல்களில் சிறைப்பணியாளர்கள் ஈடுபடுவதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் புகார்களுக்கு இடமளிக்காமல் சிறை நிர்வாகம் செயல்பட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் கலக்கமடைய வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories