நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே
அறியும் வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிசார் என்ற புதிய
செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி
மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியில்
ஈடுப்பட்டு வருகிறது.
நாசா- இஸ்ரோ சிந்தடி அபர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கோள் மூலம் பூமியில்
ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம் உள்ளிட்ட இயற்கை
சீற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக அறிய முடியும்.
இந்த செயற்கைகோள் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது.
இந்த செயற்கைகோள்
வரும் 2021-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


