திருப்பரங்குன்றம் யானை உடல்நிலை: எம்எல்ஏ ஆய்வு!

Published:

IMG WA
IMG WA

மதுரை: திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையின் உடல்நிலை குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ சரவணன் பார்வையிட்டார் .

யானையின் உடல் நலம் குறித்து கால்நடை துறை மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான தெய்வானை கோயில் வளாகத்தில் வளர்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக யானைக்கு திடீரென மதம் பிடித்து தாக்கியதில் பாகன் காளிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார் .

இதனை தொடர்ந்து கால்நடை துறை மற்றும் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தெய்வானையை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தனர்.

தற்பொழுது யானை தெய்வானைக்கு நடைபெற்றுவரும் சிகிச்சை முறைகள் வழிகாட்டுதல் குறித்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவத் துறையிடம் எம்எல்ஏ சரவணன் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து யானை இயல்பு நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இறந்த பாகன் காளிமுத்து குடும்பத்திற்கு நிவாரண உதவியும் .
காளிமுத்து மனைவிக்கு அரசு வேலையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி: ரவிச்சந்திரன்,, மதுரை

Related articles

Recent articles

spot_img