மதுரை: நேரில் ஆஜராவதில் இருந்து… ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு!

Published:

madurai collector office
madurai collector office file pic

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வருவோர், ஆண்டு தோறும் மதுரை மாவட்ட கருவூலத்தில் நேரில் ஆஜராகி வருகின்றனர். வர முடியதோர், மருத்துவரிடம் ஆயூள் சான்று பெற்று, அரசு உயர் அதிகாரி சான்றுடன் மாவட்ட கருவூல அலுவலரிடம் சமர்ப்பிப்பது மரபாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக (2020ஆம் ஆண்டு) இந்த ஆண்டு கருவூலத்தில் பென்சன்தாரர்கள் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img