திராவிட அரசியல் முகமூடியை கிழித்த எஸ்.வி.சேகர்

    received 855761931254984 - 2026

    திராவிட கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த எஸ்.வி சேகர்
    !

    திராவிட கட்சிகளை சேர்ந்த அரசியல் வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில்
    பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும்., நடிகருமான எஸ்.வி சேகர்
    தனது முகனூல் பக்கத்தில் திராவிடம்னா என்னா அண்ணே..? எனும் தலைப்பில்
    வெளியிட்டுள்ள பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழகத்தில் திராவிட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த
    உறுப்பினர்கள் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வயிறு வளர்பதற்காக
    பிராமணர்கள் மற்றும் இந்துகளுக்கு எதிரான கருத்துக்களை அநாகரீகமாக பேசி
    பிழைப்பு நடத்தி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

    இந்து விரோதம் தூஷணம் பேசி, தூஷித்து வரும் திராவிடவாதிகள் ஒரு பக்கம்
    திருமணங்களை செய்து வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் “தாலியறுக்கும்” கழிசடை,
    கருமாந்திர வேலைகளையும் செய்து வருகிறார்கள். இதனால், திராவிடத்தில் ஊறிப்
    போன, நவீன நாத்திக வாதிகள் மக்களை பகுத்தறிவோடு ஏமாற்ற திட்டமிட்டு திராவிட
    கட்சிகள் எனும் பெயரில் ஒரு கூட்டத்தையே உருவாக்கி ஆட்சி அதிகாரத்தில்
    அமர்ந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை கோடி
    கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர் என இந்துக்கள் கூறி வருகின்றனர் .

    இந்த நிலையில் எஸ்.வி சேகர் தனது முகனூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு
    பதிவில் கூறியுள்ளதாவது :-

    திராவிடம்னா என்னா அண்ணே..?
    .
    மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..
    .
    ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி
    நடத்துவது..
    .
    மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..
    .
    சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..
    .
    ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..
    .
    மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி
    கேக்கிறது..
    .
    சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம்
    கட்டுறது..
    .
    பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..
    .
    விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..
    .
    தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும்
    பார்க்கிறது..
    .
    இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா… என்று
    முகனூல் பதிவில் எஸ்.வி சேகர் கூறியுள்ளார். இந்த பதிவானது சமூக ஊடகங்களில்
    வைரலாக பரவி வருகிறது.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.