சாலையில் அடிபட்ட நிலையில் இளைஞர்… கண்டுகொள்ளாமல் சென்ற ‘பொதுஜனம்’!

accident-at-madurai
accident-at-madurai

மதுரை மாவட்டம் புதூர் சூரிய நகர் சாலையில் அடிபட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த இளைஞர் தன்னார்வு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மதுரை புதூர் காவல் நிலையம் அருகில் சூர்யா நகர் அருகே ஒருவர் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சாலையில் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை யாரும் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை.

அவ்வழியாக சுரபி அறக்கட்டளையைச் சேர்ந்த சேது மற்றும் குமார் ஆகியோர் வந்து கொண்டிருந்த போது சாலையில் அடிபட்டு கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த நபர் பெயர் மாரியப்பன் எனவும் அவர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருவதாக அடையாள அட்டையை வைத்து அடையாளம் காணப்பட்டது

இவர் விபத்தில் சிக்கியது இதுகுறித்து புதூர்காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், காயமடைந்து ஒருவர் சாலையில் கிடந்த போது, பொது மக்கள் கண்டும் காணாமலும் சென்றது பெரும் அவலமாகவே பார்க்கப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories