கொரோனா: அதிக பண வசூல் செய்த மருத்துவமனை! அனுமதியை ரத்து செய்த அரசு!

Screenshot 2020 0801 181006 - 2026

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் என்று கூறிவிட்டு ரூ.16 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னை நியூ ஆவடி சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிவந்த ஒருவர் கொரோனாவுக்காக அட்மிட் ஆனார். அவரிடமிருந்து கொரோனா சிகிச்சைக்கு என்று தொடக்கத்திலேயே ரூ.5 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் வசூல் செய்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் கூடுதலாக 11 லட்ச ரூபாயைக் கட்டச் சொன்னதால் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.

மருத்துவமனையின் அடாவடி வசூல் தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. மருத்துவமனை அளித்த பில் காப்பி சமூக ஊடகங்களிலும் வைரல் ஆனது. சிகிச்சையே இல்லாத கொரோனாவுக்கு தினமும் பரிசோதனை செய்தோம், பாதுகாப்பு கருவிக்கு கட்டணம் என்று கூறி கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சிக்கிய மருத்துவமனை சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை இல்லை. பல முறைகேடுகள் அங்கு நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் அங்கு சென்று ஏமாறுவதை தவிர்க்க மருத்துவமனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories