கோமதி அம்மன் ஆடித் தபசுக் காட்சி!

Published:

sankarankoil adi thapasu - 2026

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழா கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் திருக்காட்சி .

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்திபெற்ற
சங்கரநாரயண சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இக்கோவிலில் ஆடித்தவசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . ஆடித் திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்த ஆடித்தவசு திருவிழா இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவில் கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய திருநாளான இன்று ஆடித் தபசு காட்சி நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் சங்கரலிங்க சுவாமி,
சங்கரநாராயணசுவாமி, கோமதி அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கும்ப பூஜை நடைபெற்றது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img