பல்வேறு இடங்களில் சிறுமிகளுக்கு நடந்த பாலியல் தொல்லை! அதிகரிக்கும் வன்கொடுமை!

vankodumai 1 - 2026

வேலூர் காட்பாடிப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று காலை திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்பகுதி மக்கள், சிறுமியைப் பத்திரமாக மீட்டு காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், சிறுமியின் பெற்றோர் பழைய பொருள்களைச் சேகரிக்கும் தொழில் செய்கிறார்கள். இந்த சிறுமியுடன் சேர்த்து மொத்தம் 4 பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

தாயும், தந்தையும் மதுவுக்கு அடிமையானதால், உடன் பிறந்த தங்கைகளையும், தம்பிகளையும் அந்தச் சிறுமிதான் பாதுகாத்துவருகிறார். இதற்காக தன்னுடைய பள்ளிப் படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டார். இந்நிலையில், பெற்றோர் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்துள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி விபரீத முடிவுக்குத் தள்ளப்பட்டது தெரியவந்தது.

போலீஸார், சிறுமியின் தந்தையைக் காவல் நிலையம் வரவழைத்து அறிவுரை கூறி கடுமையாக எச்சரித்தனர். பின்னர், சிறுமியை மீட்டு சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் மூலம் அரசு காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இந்த சிறுமியின் தங்கை, தம்பிகளையும் அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை சமூக நலத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
Screenshot_2020_0807_131102

காட்பாடி வள்ளிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்ற 65 வயது முதியவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு தையல் பயிற்சி கொடுக்கிறார். நேற்று அந்தக் கடைக்கு வந்த 12 வயது சிறுமிக்கு ஜோசப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து ஜோசப்பை சரமாரியாக அடித்து உதைத்தனர். பலத்த காயமடைந்த அவரை காட்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் ஜோசப்பிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. கரு வளர்ச்சியடைந்த காரணத்தினால், மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிறுமிக்குத் தொடர்ந்து மகப்பேறு சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர் பெண் குழந்தைப் பிறந்தது. இதுகுறித்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சிறுமியை ஏமாற்றி தவறான உறவு வைத்துள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனால், சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது. சிறுவர்கள் இரண்டு பேரையும், இந்த கொடூர சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த 43 வயது பெண்ணையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரைத் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories