December 6, 2025, 7:00 PM
26.8 C
Chennai

மதுரையில்… சுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்!

madurai-meeting-collector-officials
madurai-meeting-collector-officials

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது.

இந்திய சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா நடைபெறும் ஆயூதப்படை மைதானத்தை தயார்படுத்துதல் விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல் விழாவிற்கு வருகை தருகின்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்தல்
சிறப்பாக பணியாற்றக் கூடிய அலுவலர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கான பட்டியல்களை தயார் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, தேசிய சமூக நலப்பணி படை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செய்தல். விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி
போக்குவரத்து வசதி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் , மேலும் சுதந்திர தின விழாப்பணிகளை வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று மரியாதை செலுத்த சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழா நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் பரிசோதனை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதற்கும் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தவும் விழா நடைபெறும் இடத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்,
கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ப்ரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) ராஜதிலகம் உதவி இயக்குநர் (ஊராட்சி) செல்லதுரை உதவி இயக்குநர் (பேரூராட்சி) எஸ். சேதுராமன் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் லீலாவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories