யானையைச் சீண்டிய இளைஞர்! ரூ.10000 அபராதம் விதித்த வனத்துறை!

elephant-1

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வாகனத்தில் துரத்தி யானையை சீண்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே சாலை செல்கிறது.

இச்சாலையில் செல்பவர்களை வன விலங்குகள் தாக்காமல் இருப்பதற்கும், வன விலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சாலையில் வாகனத்தை நிறுத்தவோ, சாலை ஓரங்களில் நடமாடும் வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்கவோ கூடாது என வனத்துறை கட்டுப்பாடு விதித்து உள்ளது.

இதனை மீறுபவர்கள் மீது வனத்துறையினர் அபராதம் விதித்தும் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த சுஜீன் மற்றும் அவரது 2 நண்பர்கள் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவில் ஜீப்பில் சென்றனர்.

அப்போது சீகூர் பாலம் அருகே சாலையில் எதிரே வந்த ஒற்றை யானையை வழி மறித்தது. அது கோபம் அடையும் வகையிலும், யானையை அச்சுறுத்தும் வகையிலும் சுஜீன் வாகனத்தை இயக்கி சீண்டியுள்ளார். மேலும் இவர்களிடம் இருந்து தப்பி சென்ற யானையை வாகனத்தில் துரத்தினர்.

இது குறித்த வீடியோ காட்சி வனத்துறையினரிடம் சிக்கியது. பின்பு விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் இரவு நேரத்தில் யானையை விரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சுஜீனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் இது போன்று இனி வனவிலங்குகளிடம் அத்துமீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories