யானையைச் சீண்டிய இளைஞர்! ரூ.10000 அபராதம் விதித்த வனத்துறை!

elephant-1

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வாகனத்தில் துரத்தி யானையை சீண்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே சாலை செல்கிறது.

இச்சாலையில் செல்பவர்களை வன விலங்குகள் தாக்காமல் இருப்பதற்கும், வன விலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சாலையில் வாகனத்தை நிறுத்தவோ, சாலை ஓரங்களில் நடமாடும் வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்கவோ கூடாது என வனத்துறை கட்டுப்பாடு விதித்து உள்ளது.

இதனை மீறுபவர்கள் மீது வனத்துறையினர் அபராதம் விதித்தும் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த சுஜீன் மற்றும் அவரது 2 நண்பர்கள் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவில் ஜீப்பில் சென்றனர்.

அப்போது சீகூர் பாலம் அருகே சாலையில் எதிரே வந்த ஒற்றை யானையை வழி மறித்தது. அது கோபம் அடையும் வகையிலும், யானையை அச்சுறுத்தும் வகையிலும் சுஜீன் வாகனத்தை இயக்கி சீண்டியுள்ளார். மேலும் இவர்களிடம் இருந்து தப்பி சென்ற யானையை வாகனத்தில் துரத்தினர்.

இது குறித்த வீடியோ காட்சி வனத்துறையினரிடம் சிக்கியது. பின்பு விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் இரவு நேரத்தில் யானையை விரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சுஜீனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் இது போன்று இனி வனவிலங்குகளிடம் அத்துமீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories