ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இதனிடையே ஆட்டத்தின் 18.4 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து.
பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 5.3 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 49 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
ஆஸிக்கு எதிரான முதல் டி-20 போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
Popular Categories



