இன்று முதியோர் தினம் – அனுபவத்தின் சாரம்

அனுபவத்தின் சாரம்
-ஜெயஸ்ரீ எம். சாரி,
நாக்பூர்

இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ‘கூகுள் பாபா’ என்னும் வலைத்தளமானது ஒரு க்ளிக்கில் அனைத்து விஷயங்களையும் அளிக்கிறது. இப்போது இருக்கும் நடுத்தர வயதினர்கள், அவர்களின் இளம் பருவத்தில் அவர்களின் அவர்களருகிலிருந்தவர்களான ‘அனுபவ பாபா’ என்னும் பெரியவர்களே, அவர்களின் ‘தகவல் பாபா’.

முதியோர்களின் சொல்லும், செயலுமே அனைவருக்கும் வழிகாட்டுவதாய் இருந்தது, பலருக்கு இன்றும் பயன் தருகிறது.

எங்கள் குடியிருப்பில் இருந்த பெரியவர் ஒருவர், எவரையும் குற்றம் கூற மாட்டார். அவரின் கருத்துப்படி அடுத்தவரிடம் இருந்து நல்லதையும், நேர்மறை எண்ணங்களையுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை நாம் அன்னைப்பறவையை போல பாலை மட்டும் குடித்து தண்ணீரை வைத்து விடுவதைப் போல அவர்களிடமே விட்டு விட வேண்டும்.
என் மாமனாரோ கணவன்- மனைவியின் புனித உறவை பற்றி குறிப்பிடும் போது," நாம் வணக்கம் செலுத்தும் வகையில் கையை வைத்துக் கொண்டு, இரண்டு கட்டை விரல்களிலிருந்து திறந்து மூட வேண்டும். அவ்வாறு செய்யும் போது மோதிர விரல்களில் ஒருவித வலி ஏற்படும். திருமண பந்தத்தில் இருவரும் அவ்வாறான சில வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்," என்றார்.
எங்கள் வீட்டருகில் இருந்த வயதானப் பெண்மணியோ, விவசாயிகளிடம் நாம் பொருட்கள் வாங்கும் போது பேரம் பேசக் கூடாது. அவர்களின் உழைப்புக்கு முன்னால் காகிதப் பணத்திற்கு மதிப்பே கிடையாது, என்பார்.
"அவரவர் குழந்தைகளின் முகத்தினை நோக்கினால் கஷ்டமான நேரத்திலும் மனது இளகிவிடும்," என்பது என் அன்னையின் கண்ணோட்டம்.
இக்காலப் பெற்றோரின் பெரும் கவலையே குழந்தைகளின் பருமன் தான். அதற்கும் ஒரு அருமையான வழியினை என் தாத்தா கூறினார். வாரத்தில் நான்கு நாட்கள் பசிக்காகவும், மூன்று நாட்கள் ருசிக்காவும் சாப்பிட்டால், குடும்ப ஆரோக்கியத்துடன் சேமிப்பும் வளரும்.
நான் எப்பொழுதாவது கொஞ்சம் களைப்படைந்தாலோ, என்னை யாராவது தேவையில்லாமல் குறைக்கூறிப் பேசினாலோ, என் தந்தை சொல்லும் "மூலிகையின் மகிமை அது வளரும் மலைக்கு தெரியாது. அதனை உபயோகப்படுத்துபவருக்கே அதன் அருமை தெரியும்," என்ற மந்திரமே என் மனதிடத்தை பலப்படுத்தும். இன்றைய தலைமுறையினர்
மூத்த குடிமக்களின் அனுபவத்தின் சாரத்தையும், வாழ்க்கை அனுகுமுறையையும், நேர்மறை சக்தியையும்
பின்பற்றுவதே நாம் அவர்களுக்கு உலக முதியோர் தினத்தன்று செய்யும் நன்றிக்கடனாகும். முதுமையைப் போற்றியும், அவர்களின் வழிகாட்டலின் அருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு நம்மிடமே உள்ளது என்றால் மிகையாகாது.

IMG 20201001 WA0011 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories