தமிழகத்தில் மேலும் 5017 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5017 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 6,30,408 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் புதிதாக 1306 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 175484 ஆக உயர்ந்துள்ளது
ஒரே நாளில் கொரோனாவுக்கு 71 பேர் உயிரிழந் துள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது இவர்களில் 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 41 பேர் அரசு மருத்துவ மனைகளிலும் உயிரிழந்தனர் இதையடுத்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 5548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,75,212 ஆக உயர்ந்துள்ளது
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம்