நெல்லை மாவட்டம்கடையநல்லூரில் 5 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி நடைபெற்ற மனிதசங்கிலி போரட்டம்.காவல்துறையினர்போக்குவரத்துநெரிசலைகட்டுப்படுத்தாததால்நூற்றுக்கணக்கானோர்திடீரென சாலையின்நடுவே ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம்தென்காசியை அடுத்தகடையநல்லூரில் கடையநல்லூர்நகராட்சியை கண்டித்துகடையநல்லூர் சட்டமன்றஉறுப்பினரும் இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கட்சியன் மாநிலபொதுச் செயலாளருமான முகமதுஅபுபக்கர் தலைமையில்சர்வகட்சிகளும் இணைந்து மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படஉள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலைகடையநல்லூர் பழைய பேரூந்துநிலையத்தில் இருந்து தொடங்கிபுதிய பேருந்து நிலையம் வரைசர்வகட்சியினரும், பள்ளிமாணவர்களும் மனித சங்கிலிபோராட்டத்திற்கு தயாராகினர்.ஆனால் மாலை நேரம் என்பதால்போக்குவரத்து நெரிசல் அதிகளவுஇருந்தது.
காவல்துறையினர்போக்குவரத்து நெரிசலைகட்டுப்படுத்தாமலும் உரியபாதுகாப்பு அளிக்காததாலும் சர்வகட்சியினர் பழைய பேருந்துநிலைய சாலையில்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.கடையநல்லூர் தாலுகாஅலுவலகத்தை நகர் பகுதியில்அமைக்க கோரியும், பள்ளி மற்றும்வழிபாட்டு தலங்களில் உள்ளமதுக்கடைகளை அகற்ற கோரியும்,கடையநல்லூர் நகராட்சிஆணையாளரை கண்டித்தும்கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்துஊர்வலமாக மணிக்கூண்டுஅருகே வந்து ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் பரபரப்புஏற்பட்டது.


