திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்

Published:

திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்


விழுப்புரத்தில்திருநங்கைகளுக்கான சட்டவிழுப்புணர்வு முகாம்மற்றும் பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாமும் நவம்பர் 10ஆம் தேதி துவங்கப்பட்டது


இந்த முகாமில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமை தாங்கி திருநங்கைகள் எதிர்கொள்ளும் சட்ட பிரச்னைகள் குறித்து அவர்கள் விழிப்புணர்வு கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார்.


சென்னை கதர் மற்றும் கிராம தொழில் வாரிய மாநில இயக்குனர் திரு.கே. எஸ். லக்ஷ்மி நாராயணன் அவரகள் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசுகையில், திருநங்கைகளுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பத்து நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது. இதில் சிறப்பு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்.  Pmegp scheme முலம் 1000 திருநங்கைகளாவது பங்கேற்று பயிற்சி பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் . மேலும் திருநங்கைகள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும் என்று கூறி லக்ஷ்மி நாராயணன் நம்பிக்கை அளித்தார். பத்து நாள் பயிற்சி முடிந்ததும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!


இந்த நிகழ்சி பற்றி அறிந்ததும் மிகவும் மகிழ்சியாக இருந்தது.


திருநங்கைகளில் பெரும்பாலோர் நங்கு படித்து திறமைசாலிகளாக இருக்கிறார்கள். சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால் சமூகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். சமூகம் என்றால் நம்மைப் போன்றவர்கள் தானே! இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். சக மனிதர்கள் நம்மைக் கண்டு பயப்படும்படியா நாம் நடந்து கொள்கிறோம்?


நாம்தான் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்கள் இழந்துவிட்ட தன்னம்பிக்கையை மீண்டும் பெற உதவ வேண்டியது நம் கடமை.

 

 

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img