அமைச்சர் துரைக்கண்ணு இறப்பை அரசியலாக்குவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல: செல்லூர் ராஜு!

sellur-raju-interview-in-madurai
sellur-raju-interview-in-madurai

அமைச்சர் துரைக்கண்ணு இறப்பை அரசியலாக்குவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல – அமைச்சர் செல்லூர் ராஜு

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வின் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதுரை செல்லூர் ரவுண்டானாவில் ரூ.66 இலட்சம் செலவில் அமையவுள்ள கபடி வீரன் சிலை கட்டுமான பணிகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடைப்பந்தாட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்திலும், டென்னிஸ் விளையாட்டிற்கு நியூயார்க்கிலும் தட களத்திற்கு இங்கிலாந்திலும், கூடைப்பந்தாட்ட த்திற்கு சீனாவிலும், ஹாக்கி விளையாட்டிற்கு டெல்லியிலும், கால்பந்தாட்டத்தில் தமிழகத்தின் ஏற்காட்டிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கபடி வீரர்களுக்காக மதுரை செல்லூர் ரவுண்டானாவில் சிலை அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான செயல்திட்டம் இருக்கிறது அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க பேசுவார்கள் அதேபோன்று பாஜக தலைவர்களும் பேசுகிறார்கள் ஜனநாயக அமைப்பில் அதில் ஒன்றும் பிழையில்லை.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

அதிமுக தலைமையிலான தமிழக அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் அளிக்கிறது ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அவ்வாறு நடைபெற்ற வரலாறு இல்லை. ஜெயலலிதாவுக்கு மனித வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்டது. அப்போது துணை முதல்வராக இருந்த முக ஸ்டாலினை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்த முயன்றார் அதனை இன்றுவரை அவர்கள் கண்டு பிடிக்கவே இல்லை.

இவையெல்லாம் திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

sellur-raju-interview-in-madurai2
sellur-raju-interview-in-madurai2

தற்போது அரசியல் கட்சித் தலைவர்களை நேரடியாகத் தாக்குவது என்பது மற்றொரு பரிமாண வளர்ச்சியாக இருக்கிறது இதற்கு காரணம் ஊடகங்கள்தான். ராஜபக்சே போர்க்குற்றவாளி, இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்ட தீர்மானங்கள் தொடங்கி எழுவர் விடுதலை வரை அதிமுக அரசு தொடர்ந்து இதனைச் செய்து வருகிறது.

7.5 விழுக்காடு விஷயத்தில் தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை மேற்கொண்ட அதே போன்று எழுவர் விடுதலையிலும் சரி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வின் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்றார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories