December 6, 2025, 2:34 AM
26 C
Chennai

திருவள்ளூரில் தீடிரென்று பற்றிய தீ! பல லட்சம் பொருட்கள் நாசம்!

fire-accedent
fire-accedent

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் டயர்களை தனியாக ஒரு குடோனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் விற்பனைக்காக டயர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது, சேமிப்பு குடோனில் திடீரென புகை கிளம்பி விட்டது.

இதனை தொடர்ந்து தீயானது மளமளவென பரவி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை முழுவதுமே புகையால் சூழ்ந்து காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சிப்காட், மற்றும் தேர்வாய் போன்ற 4 தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்பட்ட உடனே தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

எனினும் தீப்பிடிக்காத டயர்களை அப்புறப்படுத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் ப்ரீத்தி, பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தீத்தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் கும்மிடிபூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதோடு அந்த தொழிற்சாலைக்கு செல்லும் பகுதியில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு சீல் வைத்து அடைத்தனர்.

அதன் பின் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயர்கள் எரிந்து நாசமாகின. அதோடு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் இரண்டு சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்குகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சி செய்து அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories