December 5, 2025, 8:43 PM
26.7 C
Chennai

அஜித் சுத்தமான தங்கம்: ‘தல’யுடன் பைக்கில் பயணித்தவர் ஃபோட்டோஸ் வெளியிட்டு பதிவு!

ajith-3
ajith-3

10,000 கி.மீ பைக் பயணத்தை அஜித் முடித்திருப்பதாக உடன் பயணித்தவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் அஜித் பங்கேற்கவுள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக் பயணத்தைத் தொடங்கினார் அஜித். தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.

இடையே, சாலையோர உணவகம் வைத்திருப்பவரின் மகன் படிப்புச் செலவை அஜித் ஏற்றிருப்பதாகச் செய்தி மட்டுமே வெளியானது.

தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஹைதராபாத் திரும்பியுள்ளார் அஜித். தன்னுடன் பயணித்த அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது:

“அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை – கோவை -சென்னை – ஹைதராபாத் – வாரனாசி – காங்டாக் – லக்னோ – அயோத்யா – ஹைதராபாத் – சென்னை என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்’ இவ்வாறு தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், வீடியோ எடுத்திருந்தால் அதை யூடியூப் தளத்தில் வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தினேஷ் குமார், “இல்லை, என்றும் கிடையாது. எனக்கு அஜித் அவர்களைத் தெரியும். அவருக்குத் தனிப்பட்டு இருப்பது பிடிக்கும். நாம் அவரை மதிக்கிறோம் என்றால் அவரது இந்த விருப்பத்தையும் மதிக்க வேண்டும். நான் அவருடன் வண்டி ஓட்டியிருக்கிறேன்.

எனது ஹெல்மெட்டில் கேமராவை வைக்கவில்லை. என் மொபைலில் புகைப்படம் எடுக்கவில்லை. இந்த புகைப்படம் அஜித் அவர்களின் சம்மதத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரே மூச்சில் அவர் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துவிட்டார் என்பதை உங்களிடம் சொல்வதற்காக. மற்றவர்கள் 5000 கிலோமீட்டர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரும் அவர் நண்பர்களும் 10,000க்கும் அதிகமாகப் பயணப்பட்டுள்ளனர். அவர் பைக் பயணத்தின் தீவிர ரசிகர்” என்று தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

விரைவில் அஜித் பங்கேற்கும் ‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories