December 6, 2025, 3:24 AM
24.9 C
Chennai

மூச்சு திணறலால் முகாமிற்கு நடந்து செல்லும் யானை!

elephant-1
elephant-1

மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மாத நல்லா மற்றும் வாழைத்தோட்டம் போன்ற இடங்களை சுற்றி உள்ள சுற்றுப்புற பகுதியில் 15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீ பந்தம் வீசப்பட்டதால் வேறு ஒரு யானை இறந்துவிட்டது. இந்நிலையில் வனத்துறையினர் இந்த யானைக்கும் அதே நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சி அதனை தெப்பகாடு முகாமிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தினால் மூச்சுவிட அவதிப்படும் யானைக்கு அது மீண்டும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிந்த வனத்துறையினர் முதன் முறையாக வாகனம், மயக்க ஊசி மற்றும் கும்கி என எதுவும் இல்லாமல் யானையை கால்நடையாக கரும்பு, தர்பூசணி போன்றவற்றை வழிநெடுக கொடுத்து அழைத்து வருகிறார்கள். இந்த யானையானது குரும்பர் பள்ளம் அருகில் வந்தபோது, அதில் ஓடிய தண்ணீரை குடித்துள்ளது.

அதன்பிறகு அந்த யானைக்கு ஊழியர்கள் மூங்கிலை உணவாக கொடுத்த பின்னர் அதனை சாப்பிட்டுவிட்டு யானை அங்கேயே ஓய்வெடுத்து உள்ளது.

மேலும் இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ரிவால்டோ யானை மூச்சு திணறல் காரணமாக தினமும் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே நடந்து அதன் பிறகு களைப்பால் தூங்கி விடுகிறது எனவும், பழம் கொடுத்து மெதுவாகத்தான் அந்த யானையை அழைத்து செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த யானையை அழைத்து செல்ல மேலும் இரண்டு நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். அதோடு தெப்பக்காடு முகாமில் யானையை பராமரிப்பதற்காக அமைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீலகிரி மக்களிடையே இத்தனை வருடங்கள் தங்களுடன் சகஜமாக பழகி வந்த யானை பிரிந்து செல்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories