ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள் கடந்த 20–ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்று அங்குள்ள சிறையில் அடைத்தனர். இதேபோல் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. இதை கண்டித்தும் தமிழக மீனவர்கள் 54 பேரை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார், ஊர்க்காவல்துறை ஆகிய நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்தார். அதன்படி 54 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. அவர்களை இன்று பிற்பகல் இலங்கை கடற்படை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கிறார்கள். பின்னர் மாலையில் அவர்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

