பெற்ற மகனை அடித்து… தீவைத்து கொன்ற பெற்றோர்!

Published:

IMG 20191114 WA0011 - 2026

பெற்ற பிள்ளையை அடித்து தீவைத்து கொன்றனர் அவரது பெற்றோர். மரம்போல் வளர்ந்த மகன் இருந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான் என்று எண்ணி விட்டனர் இந்த பெற்றோர்.

அவனை கடுமையாக அடித்து கைகளை கட்டி தலையில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்து உயிரோடு கொன்றனர் . அந்த தீயை தாங்கமாட்டாமல் அலறித் துடித்து அங்கேயே இறந்தான் அவர்களின் மகன்.

பெற்ற பிள்ளையையே கொல்லத் துணிந்த ஆத்திரம் பெற்றோர் நெஞ்சில் எழுந்ததும் துயரமே!

ஆனால் இவ்வளவு கொடூரமான செயலை இவர்கள் செய்யத் துணிந்ததற்கு காரணம் என்ன?

அவன் மதுவுக்கு அடிமையானதே காரணம். தினசரி குடித்துவிட்டு வந்து தங்களை சித்திரவதை செய்ததே!

மகனின் செயல்களால் வெறுத்துப்போன அந்த முதிய பெற்றோர் இறுதியில் இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணிந்தனர்.

செவ்வாய் இரவு வரங்கல் ரூரல் மாவட்டம் ‘தாமெர’ மண்டலம் ‘முஸ்தாயபல்லி’ யில் இந்த கொடூரம் நடந்தது.

IMG 20191114 WA0010 - 2026

‘கடாரி’ பிரபாகர், விமலா தம்பதிகளின் மகன் மகேஷ் சந்திரா (42) க்கும் மருமகள் ராதிகாவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

வாரங்கல்லில் உள்ள ‘ஏனுமாமுல’ மார்க்கெட்டில் மகேஷ்சந்திரா குமாஸ்தாவாக பணி செய்கிறார். குடிக்கு அடிமையாகி தினமும் குடும்பத்தாரோடு பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

கணவனின் பழக்க வழக்கங்களால் வெறுத்துப்போன ராதிகா குழந்தைகளோடு பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நிலையில் செவ்வாய் காலை மகேஷ்சந்திரா முழு அளவில் குடித்து விட்டு வந்து பெற்றோரோடு தகராறில் ஈடுபட்டான்.

மீண்டும் இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் பெரும் ரகளை செய்தான். பெற்றோரைத் தாக்கினான். ஆத்திரமடைந்த பெற்றோர் மகனை கம்பால் அடித்து கீழே விழுந்த மகனின் கைகளை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்தனர்.

தீவிரமான தீக்காயங்களால் அலறியபடி அவன் உயிரை விட்டான். ‘ தாமெர’ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img