பெற்ற மகனை அடித்து… தீவைத்து கொன்ற பெற்றோர்!

IMG 20191114 WA0011 - 2026

பெற்ற பிள்ளையை அடித்து தீவைத்து கொன்றனர் அவரது பெற்றோர். மரம்போல் வளர்ந்த மகன் இருந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான் என்று எண்ணி விட்டனர் இந்த பெற்றோர்.

அவனை கடுமையாக அடித்து கைகளை கட்டி தலையில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்து உயிரோடு கொன்றனர் . அந்த தீயை தாங்கமாட்டாமல் அலறித் துடித்து அங்கேயே இறந்தான் அவர்களின் மகன்.

பெற்ற பிள்ளையையே கொல்லத் துணிந்த ஆத்திரம் பெற்றோர் நெஞ்சில் எழுந்ததும் துயரமே!

ஆனால் இவ்வளவு கொடூரமான செயலை இவர்கள் செய்யத் துணிந்ததற்கு காரணம் என்ன?

அவன் மதுவுக்கு அடிமையானதே காரணம். தினசரி குடித்துவிட்டு வந்து தங்களை சித்திரவதை செய்ததே!

மகனின் செயல்களால் வெறுத்துப்போன அந்த முதிய பெற்றோர் இறுதியில் இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணிந்தனர்.

செவ்வாய் இரவு வரங்கல் ரூரல் மாவட்டம் ‘தாமெர’ மண்டலம் ‘முஸ்தாயபல்லி’ யில் இந்த கொடூரம் நடந்தது.

IMG 20191114 WA0010 - 2026

‘கடாரி’ பிரபாகர், விமலா தம்பதிகளின் மகன் மகேஷ் சந்திரா (42) க்கும் மருமகள் ராதிகாவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

வாரங்கல்லில் உள்ள ‘ஏனுமாமுல’ மார்க்கெட்டில் மகேஷ்சந்திரா குமாஸ்தாவாக பணி செய்கிறார். குடிக்கு அடிமையாகி தினமும் குடும்பத்தாரோடு பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

கணவனின் பழக்க வழக்கங்களால் வெறுத்துப்போன ராதிகா குழந்தைகளோடு பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நிலையில் செவ்வாய் காலை மகேஷ்சந்திரா முழு அளவில் குடித்து விட்டு வந்து பெற்றோரோடு தகராறில் ஈடுபட்டான்.

மீண்டும் இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் பெரும் ரகளை செய்தான். பெற்றோரைத் தாக்கினான். ஆத்திரமடைந்த பெற்றோர் மகனை கம்பால் அடித்து கீழே விழுந்த மகனின் கைகளை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்தனர்.

தீவிரமான தீக்காயங்களால் அலறியபடி அவன் உயிரை விட்டான். ‘ தாமெர’ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories