தவிக்கவிட்ட தறுதலைகள்; எங்களை காப்பாற்றுங்கள்: அமைச்சரிடம் முறையிட்ட முதியோர்!

Published:

IMG 20191114 WA0008 - 2026

எங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துங்கள்! மாநில உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட சீனியர் சிட்டிசன்கள்!

வயது முதிர்ந்த எங்களுக்கு பெற்ற பிள்ளைகளே கருணை காட்டாமல் அலட்சியப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள் என்று பல முதியோர் வருத்தம் தெரிவித்தனர்.

பெற்ற பிள்ளைகளிடமிருந்து குறைந்த அளவு ஆதரவு கூட தங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று புலம்பினர்.

IMG 20191114 WA0009 - 2026

ஹைதராபாதில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பல முதியோர்களின் பிரதிநிதிகளின் குழு, மாநில உள்துறை அமைச்சர் மஹ்மூத்அலியிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். மேலும் பெற்ற பிள்ளைகள் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் துயரத்திற்கு ஆளாக்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

சிலர் தம் சொத்துகளையும் அக்கிரமமாக பிடுங்கிக் கொண்டனர் என்றும் தாங்கள் சம்பாதித்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மெயின்டனன்ஸ் அண்ட் வெல்ஃபேர் ஆஃப் பேரெண்ட்ஸ் அண்ட் சீனியர் சிட்டிசன்ஸ் ஆக்ட் 2007 படி தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பல முதியவர்கள் உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர் .

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அதற்கு அமைச்சர் முதியோரை அவமதிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டிஜிஓ விடம் உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உத்தரவு பிறப்பித்து முதியோர்களின் புகார்களை உடனுக்குடன் பரிசீலித்து நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img