December 6, 2025, 6:38 AM
23.8 C
Chennai

சந்தேகத்தால் மனைவியை குத்தி கொலை செய்த கணவன்!

murder-1
murder-1

செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் லாரன்ஸ் (48). இவர் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வருவதாக கூறப்படுகின்றது.

இவருக்கு சரோவர்ஷா (41) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். திருமணமாகி 21 ஆண்டுகள் ஆண்டுகளான நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பால்பண்ணை அருகில் உள்ள எம்.எம்.டி.ஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளனர்.

மேலும் எட்வர்ட் லாரன்ஸ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதுபோல, நேற்று இரவும் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த எட்வர்டு லாரன்ஸ் தீடீரென சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி சரோவர்ஷாவை வயிறு, மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியதில் இரத்தம் வெளியேறியுள்ளது. இதனால், அவர் பயங்கர வலியால் அலறித்துடித்தார்.

பயங்கர இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகில் இருந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான தலைமறைவான எட்வர்ட் லாரன்ஸை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories