முதலீடு செய்தால் அதிக லாபம்.. ஆன்லைன் மூலம் பணமோசடி! போலி தொழிலதிபர்கள் கைது!

Abu bakkar - 2026

ஆன்லைன்’ வாயிலாக, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் சுருட்டிய, ‘டுபாக்கூர்’ தொழிலதிபர்களை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் வெளிநாட்டு தொலைபேசி எண் வாயிலாக, சையது அபுதாகிர் மற்றும் சையது அலி ஹுசைன் ஆகியோர், தனித்தனியாக தொடர்பு கொண்டனர்.

அப்போது, டெல்டின் இண்டர்நேஷனல் சொல்யூஷன் என்ற, எங்கள் நிறுவனத்தில், ‘ஆன்லைன்’ அன்னிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்குமென கூறினர்.

இவர்களை நம்பி, கிரெடிட் கார்டு மூலம், 10.54 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அதன் பின், லாபத் தொகையையும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இருவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சையது அபுதாகிர், 34; கடலுார் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த சையது அலி ஹுசைன்,40, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அதில், சையது அபுதாகிர், எம்.எஸ்சி.,யும், சையது அலி ஹுசைன், பொறியியல் படித்து உள்ளதும் தெரிந்தது. மோசடி குமபலான இவர்கள், பல்வேறு நிறுவனங்கள் பெயரில் இணைய பக்கம் துவங்கி, வெளிநாட்டு தொழிலதிபர்கள் போல நடித்துள்ளனர்.

தங்களிடம் சிக்கும் நபர்களிடம், ‘ஆன்லைன்’ வாயிலாக, அன்னிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் சுருட்டியதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1.95 லட்சம் ரூபாய், 5 மொபைல் போன் மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories