கேம் ஏற்றி தாரேன்.. செல்லுக்கு ஆசைப்பட்டு சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை!

anbu kumar - 2026

பெரம்பலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு இளைஞர், சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புகுமார் (11) என்ற மகன் இருந்தான்.

இவன் ஆறாம் வகுப்பை அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்புகுமார் தனது நண்பர் விட்டிற்கு போவதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பல இடங்களுக்கும் சென்று அன்புகுமாரை தேடி பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அன்புகுமார் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் சடலமாக கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

dhanush - 2026

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் தண்ணீரில் இருந்து சிறுவனுடைய உடலை மீட்டனர். அப்போது சிறுவனின் கைகள் மற்றும் வாயில் காயம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர் மகனை யாரோ கொலை செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவனை யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் வி.களத்தூர் ராயப்பா நகரில் வசித்து வரும் தர்மலிங்கம் என்பவரது மகன் தனுஷ் (19) தான் சிறுவனை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் அன்புகுமார் வைத்திருந்த செல்போன் மீது தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து செல் போனில் “கேம்” ஏற்றி தருவதாக கூறி அன்புகுமாரை அழைத்து சென்றுள்ளார். அதன் பின் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து சிறுவன் வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றதாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து தனுஷ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories