கேம் ஏற்றி தாரேன்.. செல்லுக்கு ஆசைப்பட்டு சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை!

anbu kumar - 2026

பெரம்பலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு இளைஞர், சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புகுமார் (11) என்ற மகன் இருந்தான்.

இவன் ஆறாம் வகுப்பை அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்புகுமார் தனது நண்பர் விட்டிற்கு போவதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பல இடங்களுக்கும் சென்று அன்புகுமாரை தேடி பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அன்புகுமார் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் சடலமாக கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

dhanush - 2026

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் தண்ணீரில் இருந்து சிறுவனுடைய உடலை மீட்டனர். அப்போது சிறுவனின் கைகள் மற்றும் வாயில் காயம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர் மகனை யாரோ கொலை செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவனை யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் வி.களத்தூர் ராயப்பா நகரில் வசித்து வரும் தர்மலிங்கம் என்பவரது மகன் தனுஷ் (19) தான் சிறுவனை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் அன்புகுமார் வைத்திருந்த செல்போன் மீது தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து செல் போனில் “கேம்” ஏற்றி தருவதாக கூறி அன்புகுமாரை அழைத்து சென்றுள்ளார். அதன் பின் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து சிறுவன் வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றதாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து தனுஷ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories