வெடிகுண்டு வைத்து முதல்வரை கொலை செய்வதாக மிரட்டல் கடிதம்! தீவிர விசாரணை!

bomb threat 1
bomb threat 1

முதல்வரை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என, போலீஸ் கமிஷனருக்கு, ரத்த கையெழுத்திட்ட கடிதம் வந்ததால், இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாருக்கு, கடந்த மார்ச், 29ல் ரத்த கையெழுத்திட்ட கடிதம் வந்தது. அதில், ‘சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, சேலம் கலெக்டர் ராமன் ஆகியோரை, குண்டு வெடிக்கச்செய்து கொலை செய்வோம்’ என, எழுதப்பட்டிருந்தது.

நுண்ணறிவு போலீசார் விசாரணையில், கடிதம் எழுதியது, சீல்நாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழரசன், 38, என தெரிந்தது. கடிதத்தில், தேவி உள்பட ஆறு பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

நேற்று காலை, அன்னதானப்பட்டி போலீசார், தமிழரசனை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். உண்மையில் தமிழரசன் எழுதினரா, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் யாரேனும் எழுதினரா? வேறு யாரேனும், இவர்களை பழிவாங்கும் நோக்கில் எழுதினரா என, விசாரணை நடக்கிறது. பிரசாரத்துக்கு, முதல்வர் அடிக்கடி சேலம் வந்து செல்லும் நிலையில், ரத்த கையெழுத்திட்ட, மிரட்டல் கடிதத்தால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால், நேற்று இரவு, சேலம் வந்த முதல்வர், இன்று பிரசாரம் மேற்கொள்ளும், கோட்டை மைதானம், நாளை பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க, உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சீல்நாயக்கன்பட்டி, ‘சுபம்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த, தமிழரசன், சில மாதங்களுக்கு முன், வீட்டை காலி செய்துள்ளார். அங்கிருந்தவர்களுக்கும், இவருக்கும் முன்பகை இருந்தது. அவர்களை பழி வாங்குவதாக மிரட்டியிருந்தார்.

அதற்காக, முதல்வரை கொல்வதாக கடிதம் எழுதி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாரா என விசாரணை நடக்கிறது. அதேநேரம், முதல்வர் பிரசாரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில், வேறு யாருடைய தூண்டுதலில் கடிதம் எழுதப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories