முயற்சியால் கிட்டும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi-thirthar
Bharathi-thirthar

ஞானம் பெற்று மோக்ஷம் அடைவதாலேயே மனிதன் பரமச்ரேயஸ்ஸை அடைவான். ஆர்வமுள்ளவர்கள் அதை அடைவதற்கு முயற்சி செய்கிறார்கள். ‘ஞானந்தான் மோக்ஷத்திற்கு காரணமாக இருக்கிறதென்றால் சாஸ்த்ரத்தில் கூறியுள்ள கர்மாக்கள் எதற்காக? நேரடியாகவே ஞானம் வந்துவிடாதா?’ என்ற ஸந்தேஹம் சிலருக்குத் தோன்றுகிறது.

அதற்கு பதில் என்னவென்றால் எல்லோருக்கும் உடனடியாக ஞானம் வந்துவிடாது. அனேக ஜன்மாவிலுள்ள கர்மவாஸனைகள் அதற்குத் தடையாக இருக்கும். சித்தசுத்தி அடையாவிட்டால் ஞானம் பெறமுடியாது. சாஸ்த்ரத்தில் கூறியுள்ள கர்மாக்களை ஈச்வரார்ப்பண புத்தியுடன் செய்துவந்தால்தான் சித்தசுத்தி உண்டாகும். ஆகையால் கர்மவிதி கூறும் சாஸ்த்ரம், பிரமாணம் இதற்கு அவசியம். இதைத்தான் ஸ்ரீ சங்கரபகவத்பாதார் தன்னுடைய பாஷ்யத்தில்,

न च एवं कर्मविधिश्रुतेः अप्रामाण्यं, पूर्वपूर्वप्रवृत्तिनिरोधेन उत्तरोत्तरापूर्वप्रवृत्तिजननस्य प्रत्यगात्माभिमुख्येन
प्रवृत्युपादनार्थत्वात् ।

ந ச ஏவம் கர்மவிதிச்ருதே: அப்ராமாண்யம் பூர்வபூர்வப்ரவ்ருத்தி நிரோதேன

உத்தரோத்தராபூர்வப்ரவ்ருத்திஜனனஸ்ய ப்ரத்சகாத்மாபிமுக்யேன

ப்ரந்ருச்யுபாதனார்தத்வாத். என்று கூறினார்.

முந்தைய பழக்கங்களைத் தடுத்து புதிய பயிற்சிகள் மூலம் மனதை சுத்திசெய்து அந்தராத்மாவை நெருங்க உதவி செய்யும் கர்மவிதிகள், ஞானம் வராதவனுக்குத்தான். ஞானம் வந்தவனுக்கு இல்லை. ஞானமடைய முயற்சிசெய்பவனுக்கு பலன் ஸத்யமாக இருக்கிறது. ஆனால் ஞானம் வந்தவனுக்கு இதெல்லாம் மித்யாவாகத் தோன்றும்.

मिथ्यात्वेऽपि उपायस्य उपेयसत्यतया सत्यत्वं एव स्यात् ……

மித்யாத்வே(அ)பி உபாயஸ்ய உபேயஸத்யதயா ஸத்யத்வம் ஏவ ஸ்யாத்…..

ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவும் பகவத்கீதையில்,

कर्मण्यैव हि संसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि ।।

கர்மண்யைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய்:
லோகஸங்க்ரஹமேவாபி ஸபச்யன் கர்துமர்ஹஸி . என்று கூறினார்.

ஜனகரைப்போன்ற ஞானிகள்கூட லோகக்ஷேமத்திற்காக கர்மாக்களைச் செய்து வந்தனர் என்று அர்த்தம். ஆகையால் ஞானமடைவதற்கு சித்தசுத்தி முக்கியமாக இருப்பதால் கர்மாக்களை ஈச்வரார்ப்பணமாக செய்துவந்து சித்தசுத்தியடைய எல்லோரையும் ஆசீர்வதிக்கிறோம். என்று மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories