முயற்சியால் கிட்டும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi-thirthar
Bharathi-thirthar

ஞானம் பெற்று மோக்ஷம் அடைவதாலேயே மனிதன் பரமச்ரேயஸ்ஸை அடைவான். ஆர்வமுள்ளவர்கள் அதை அடைவதற்கு முயற்சி செய்கிறார்கள். ‘ஞானந்தான் மோக்ஷத்திற்கு காரணமாக இருக்கிறதென்றால் சாஸ்த்ரத்தில் கூறியுள்ள கர்மாக்கள் எதற்காக? நேரடியாகவே ஞானம் வந்துவிடாதா?’ என்ற ஸந்தேஹம் சிலருக்குத் தோன்றுகிறது.

அதற்கு பதில் என்னவென்றால் எல்லோருக்கும் உடனடியாக ஞானம் வந்துவிடாது. அனேக ஜன்மாவிலுள்ள கர்மவாஸனைகள் அதற்குத் தடையாக இருக்கும். சித்தசுத்தி அடையாவிட்டால் ஞானம் பெறமுடியாது. சாஸ்த்ரத்தில் கூறியுள்ள கர்மாக்களை ஈச்வரார்ப்பண புத்தியுடன் செய்துவந்தால்தான் சித்தசுத்தி உண்டாகும். ஆகையால் கர்மவிதி கூறும் சாஸ்த்ரம், பிரமாணம் இதற்கு அவசியம். இதைத்தான் ஸ்ரீ சங்கரபகவத்பாதார் தன்னுடைய பாஷ்யத்தில்,

न च एवं कर्मविधिश्रुतेः अप्रामाण्यं, पूर्वपूर्वप्रवृत्तिनिरोधेन उत्तरोत्तरापूर्वप्रवृत्तिजननस्य प्रत्यगात्माभिमुख्येन
प्रवृत्युपादनार्थत्वात् ।

ந ச ஏவம் கர்மவிதிச்ருதே: அப்ராமாண்யம் பூர்வபூர்வப்ரவ்ருத்தி நிரோதேன

உத்தரோத்தராபூர்வப்ரவ்ருத்திஜனனஸ்ய ப்ரத்சகாத்மாபிமுக்யேன

ப்ரந்ருச்யுபாதனார்தத்வாத். என்று கூறினார்.

முந்தைய பழக்கங்களைத் தடுத்து புதிய பயிற்சிகள் மூலம் மனதை சுத்திசெய்து அந்தராத்மாவை நெருங்க உதவி செய்யும் கர்மவிதிகள், ஞானம் வராதவனுக்குத்தான். ஞானம் வந்தவனுக்கு இல்லை. ஞானமடைய முயற்சிசெய்பவனுக்கு பலன் ஸத்யமாக இருக்கிறது. ஆனால் ஞானம் வந்தவனுக்கு இதெல்லாம் மித்யாவாகத் தோன்றும்.

मिथ्यात्वेऽपि उपायस्य उपेयसत्यतया सत्यत्वं एव स्यात् ……

மித்யாத்வே(அ)பி உபாயஸ்ய உபேயஸத்யதயா ஸத்யத்வம் ஏவ ஸ்யாத்…..

ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவும் பகவத்கீதையில்,

कर्मण्यैव हि संसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि ।।

கர்மண்யைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய்:
லோகஸங்க்ரஹமேவாபி ஸபச்யன் கர்துமர்ஹஸி . என்று கூறினார்.

ஜனகரைப்போன்ற ஞானிகள்கூட லோகக்ஷேமத்திற்காக கர்மாக்களைச் செய்து வந்தனர் என்று அர்த்தம். ஆகையால் ஞானமடைவதற்கு சித்தசுத்தி முக்கியமாக இருப்பதால் கர்மாக்களை ஈச்வரார்ப்பணமாக செய்துவந்து சித்தசுத்தியடைய எல்லோரையும் ஆசீர்வதிக்கிறோம். என்று மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories