இறந்தவங்க ரேஷன் கார்ட் வைத்து நடக்கும் கொள்ளை!

retion
retion

தமிழகத்தில் மொத்தம் 35,233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்கள் மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

பொதுவாக குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டால், உயிரிழந்த குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை குடும்ப அட்டையிலிருந்து நீக்க வேண்டும்.

அதேபோல், யாரும் இல்லாமல் தனியாக வாழும் ஒருவர் இறந்து விட்டால் முறைப்படி அந்த தனி ரேஷன் கார்டை ஒப்படைத்து அதனை நீக்கி விட வேண்டும்.

ஆனால் உயிரிழந்த தனி நபரின் ரேஷன் கார்டை பயன்படுத்துவது இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாக கருதப்படும். அந்த வகையில் ஒரு சிலர் தனி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த தனி ரேஷன் கார்டு மூலம் சில கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற கொள்ளையில் ரேஷன் கடை ஊழியர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மை..

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பெரும்பாலும் உள்ளூரைச் சேர்ந்தவகள் தான் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிகிறார். எனவே ஊரில் யார் இறந்து போனாலும் அவர்களுக்கு உடனடியாக தெரிந்து விடும். அந்த ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பது தொடங்கி, அரசின் நிவாரணம், உதவித் தொகை என அனைத்தையும் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.

தனிநபர் இறந்துவிட்டாலும், அந்த கார்டை அரசிடம் ஒப்படைக்காமல், ரேஷன் கடை ஊழியர்களே அதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால் செல்போன்களுக்கே குறுஞ்செய்தி வந்து விடுகிறது. இதனால், இத்தகைய மோசடிகள் வெளிவர தொடங்கி உள்ளன.

இதுகுறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டை முடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories