பரமத்தி வேலூரில் பரபரப்பு! வீட்டுக்குள் பாலியல் தொழில்!

samunteswari
samunteswari

கிராமத்து வீட்டில் பத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த வீட்டின் உரிமைக்காரப் பெண், புரோக்கர்கள், வாடிக்கையாளர்கள் என 5 பேர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருக்கிறது வடக்கு நல்லியம்பாளையம்.

இங்குள்ள ஒரு வீட்டில் 10 க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து தொடர்ந்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரனுக்கு தொடர் புகார் வந்திருக்கிறது. இதனால், அவர் போலீஸாரை அலெர்ட் செய்தார்.

இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பரமத்திவேலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீஸார் பாலியல் தொழில் நடந்த வீட்டை சுற்றிவளைத்து, திடீர் சோதனை செய்தனர்.

Joseph sankar
Joseph sankar

அப்போது, அந்த வீட்டுக்குள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த அழைத்து வரப்பட்டிருந்த 10 பெண்களும், 2 ஆண் வாடிக்கையாளர்களும் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீஸார், 10 பெண்களை அவர்களது பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

மேலும், தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய வடக்கு நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பரின் மனைவி சாமுண்டீஸ்வரி (வயது: 53), பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை, காமராஜ் மன்ற தெருவைச் சேர்ந்த சங்கர் (வய்து: 45), திருப்பத்தூர் அருகே உள்ள ஆசிரியர் நகர், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது: 55) மற்றும் பாலியல் தொழில் நடந்த வீட்டிற்கு வாடிக்கையாளராக வந்திருந்த இரண்டு பேர் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். மொத்தத்தில், நான்கு ஆண்கள், தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் உள்ளிட்ட 5 பேர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதில், சாமுண்டீஸ்வரியை சேலம் பெண்கள் மத்திய சிறையிலும், சங்கர், ஜோசப், மற்றும் வாடிக்கையாளர்களான இரண்டு ஆண்கள் உட்பட 4 ஆண்களையும், ராசிபுரம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

பரமத்திவேலூரில் பெண்களை வைத்து, கிராமப் பகுதியில் மறைமுகமாக பாலியல் தொழில் செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories