பரமத்தி வேலூரில் பரபரப்பு! வீட்டுக்குள் பாலியல் தொழில்!

samunteswari
samunteswari

கிராமத்து வீட்டில் பத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த வீட்டின் உரிமைக்காரப் பெண், புரோக்கர்கள், வாடிக்கையாளர்கள் என 5 பேர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருக்கிறது வடக்கு நல்லியம்பாளையம்.

இங்குள்ள ஒரு வீட்டில் 10 க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து தொடர்ந்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரனுக்கு தொடர் புகார் வந்திருக்கிறது. இதனால், அவர் போலீஸாரை அலெர்ட் செய்தார்.

இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பரமத்திவேலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீஸார் பாலியல் தொழில் நடந்த வீட்டை சுற்றிவளைத்து, திடீர் சோதனை செய்தனர்.

Joseph sankar
Joseph sankar

அப்போது, அந்த வீட்டுக்குள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த அழைத்து வரப்பட்டிருந்த 10 பெண்களும், 2 ஆண் வாடிக்கையாளர்களும் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீஸார், 10 பெண்களை அவர்களது பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய வடக்கு நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பரின் மனைவி சாமுண்டீஸ்வரி (வயது: 53), பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை, காமராஜ் மன்ற தெருவைச் சேர்ந்த சங்கர் (வய்து: 45), திருப்பத்தூர் அருகே உள்ள ஆசிரியர் நகர், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது: 55) மற்றும் பாலியல் தொழில் நடந்த வீட்டிற்கு வாடிக்கையாளராக வந்திருந்த இரண்டு பேர் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். மொத்தத்தில், நான்கு ஆண்கள், தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் உள்ளிட்ட 5 பேர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதில், சாமுண்டீஸ்வரியை சேலம் பெண்கள் மத்திய சிறையிலும், சங்கர், ஜோசப், மற்றும் வாடிக்கையாளர்களான இரண்டு ஆண்கள் உட்பட 4 ஆண்களையும், ராசிபுரம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

பரமத்திவேலூரில் பெண்களை வைத்து, கிராமப் பகுதியில் மறைமுகமாக பாலியல் தொழில் செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories