அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் பெயரில் வேறு சிம்கார்டு உள்ளதா?

cell phone
cell phone

உங்கள் பெயரின் கீழ் எத்தனை மொபைல் நம்பர் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க, DoT ஒரு போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் பெயரின் கீழ் எத்தனை மொபைல் எண்கள் வாங்கப்பட்டுள்ளது? அதாவது தங்கள் பெயரின் கீழ் யாரவது சிம் கார்டு வாங்கி உள்ளார்களா? என்பதை தற்போது தொலைதொடர்புத் திணைக்களம் (Department of Telecommunications – DoT) அறிமுகப்படுத்தி உள்ள போர்ட்டல் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வழியாக பயனர்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஆம், அந்த போர்ட்டலின் முகவரி – tafcop.dgtelecom.gov.in ஆகும். இந்த போர்ட்டலின் முக்கிய பயன்பாடு என்னவென்றால், ஒருவர் தங்களுக்கு தெரியாமல் தங்களின் பெயரில் யாராவது பயனர்கள் மொபைல் எண்(சிம் கார்ட்) வாங்கி, பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டுபிடிக்க உதவும்.

ஒருவரின் விவரங்களை அங்கீகாரமற்ற முறையில் பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்த பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மோசடி செய்பவர்கள் தங்களின் பெயரில் சிம் கார்டை வாங்குவது இல்லை. மாறாக வேறு ஒருவரின் பெயரின் கீழ் சிம் கார்டை வாங்கி அதை சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் தான். இதை தடுப்பதர்க்கு இந்த போர்டல் மிகவும் உதவியுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை பற்றி பேசிய ஆந்திர பிரதேச, DoT-இன் துணை இயக்குநர் ஜெனரல் A.ராபர்ட் ரவி, “மக்கள் தங்கள் பெயரில் வழங்கப்படும் மொபைல் இணைப்புகளை அடையாளம் காண இந்த தளம் உதவும். அப்படி, ஒருவர் தங்கள் பெயரின் கீழ், தங்களால் பயன்படுத்தப்படாத மொபைல் எண்ணை இருப்பதை கண்டிறிந்தால் அதை உடனடியாக தடுக்குமாறு கோரலாம்.

ஒரு தனி நபர் தங்களின் பெயரில், ஒன்பது மொபைல் இணைப்புகளை பெற்று கொள்ளலாம். ஆனால் சில பயனர்களின் பெயரில் ஒன்பதுக்கும் மேற்பட்ட இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளதால், அவைகளை அடையாளம் கண்டு, நீக்குவதே இந்த போர்டலின் மிகப்பெரிய நோக்கமாகும்.

மேலும், ஒருவர் தங்களின் ஆக்டிவ் நம்பர் மற்றும் அதற்கு கிடைக்கும் OTP ஐப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை பயன்படுத்தலாம் என ET டெலிகாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ஒருவரின் பெயரின் கீழ் இயங்கும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை, Department of Telecommunications – DoT ஒரு எஸ்எம்எஸ் மூலம் உங்களை அலெர்ட் செய்யும். பின்னர், இதை குறித்து புகார் கொடுத்தால், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் குறிப்பிட்ட எண்களைத் செயலிழக்கச் செய்வார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories