spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்விருதுநகர் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

விருதுநகர் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

- Advertisement -
virudhunagar woman constable kanimuthu died
virudhunagar woman constable kanimuthu died

விருதுநகர் : விருதுநகர் சூலக்கரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வந்தவர் கனிமுத்து (44). இவர் கணவர் ராஜா, மகள் ராஜஸ்ரீ (11) உடன் சூலக்கரைப் பகுதியில் வசித்து வந்தார். கனிமுத்துவிற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் மருத்துவ விடுப்பில் சென்ற அவர், வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக, விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்த கனிமுத்து திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த, அந்தப் பகுதியில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் கனிமுத்துவை, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கனிமுத்து பரிதாபமாக இறந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காவலர் திடீரென்று இறந்தது காவலர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe