கடிதம் எழுதி இளம்பெண் தற்கொலை! கணவரின் நண்பர்கள் செய்த வேலை!

Reshma
Reshma

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூர் தாலுகாவை அடுத்துள்ள செல்லூர் கிராமத்தில் வசிக்கும் விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகியுள்ளது.

தற்போது இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான தென்னரசு என்பவர் வந்து சென்றுள்ளார்.

இதனை அதே ஊரை சேர்ந்த பாலமுருகன்(20) மற்றும் முத்துக்குமார்(30) ஆகியோர் ரேஷ்மாவின் கணவரான விமல்ராஜிடம் தவறாக கூறியுள்ளனர்.

இதனால் விமல்ராஜ் ரேஷ்மாவை கண்டித்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த ரேஷ்மா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முத்துக்குமார் மற்றும் பாலமுருகனை திட்டியுள்ளார்.

அதற்கு அவர்கள் இருவரும் ரேஷ்மாவிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ரேஷ்மா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதனைத்தொடர்ந்து ரேஷ்மாவின் குழந்தைகள் வெகு நேரம் அழுத சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரேஷ்மா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரேஷ்மாவின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில் ரேஷ்மாவின் வீட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் எனது சாவுக்கு பாலமுருகன் மற்றும் முத்துக்குமார் தான் காரணம் என இருந்தது.

இதனைஅடுத்து காவல்துறையினர் முத்துக்குமார் மற்றும் பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரேஷ்மாவை திட்டியதாக ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பரமக்குடி ஆர்.டி.ஓ தங்கவேலுவும் விசாரணை நடத்திய நிலையில் தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories