கூலிப்படை வைத்து மனைவியைக் கொன்ற கணவன்! சந்தானத்தின் உறவுக்கார பெண்ணுக்கு நேர்ந்த கதி!

jeya Bharathi
jeya Bharathi

திருவாரூர் தபால் நிலையத்தில் பணி பணியாற்றி வந்த நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்மணி, காரை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி.

இவர் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. ஜெயபாரதிக்கும் – கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளையான விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2013 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வசித்துவந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் குழந்தையை விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவிலிருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதி அஞ்சல் துறையில் தற்காலிக கிளர்க்காக பணியாற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று பணிக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியபோது ஜெயபாரதி மீது ஏ.டி.எம் பணம் நிரப்பும் வாகனம் மோதி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கவே, ஜெயபாரதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பாக விசாரிக்கையில், சம்பவத்திற்கு இரு தினங்களுக்கு முன்னதாக விபத்து காரணமாக வாகனத்தை கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் விலைகொடுத்து இருவர் வாங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், காலையில் ஜெயபாரதி பணிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வாகனம் சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உறவினரான நடிகர் சந்தானத்திற்கு இதுதொடர்பான தகவல் தெரிவிக்கவே, சந்தானம் அரசியல் நண்பர் மூலமாக காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும், அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கும் விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துளளார்.

இந்த நோட்டீசால் அவரது வேலைக்கும் சிக்கல் ஏற்பட்டுவிடவே, நோட்டீசை வாபஸ் பெறக்கோரி விஷ்ணு பிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை கடுமையாக மிரட்டியதாகவும், ஜெயபாரதி புகாரை வாபஸ் பெற மறுத்ததால் கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories