ஊசி சிரிஞ்சில் விற்கப்பட்ட சாக்லேட் க்ரீம்! அதிகாரிகள் சோதனை!

chocolate - 2026

வேலூர் மாநகரத்திலுள்ள கடைகளில், ஊசி போடுவதற்காக பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளில், சாக்லேட் க்ரீம் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன.

இந்த சிரிஞ்சுகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்திரசேனா தலைமையிலான அலுவலர்கள் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறைப் பகுதிகளிலுள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் சிரிஞ்சியில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

chocolate 2 - 2026

இவ்வகையான சாக்லேட்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என பெட்டிக்கடை வியாபாரியிடம் விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலூர் மார்க்கெட் பகுதியிலுள்ள மொத்த விற்பனைக் கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லாங்கு பஜார், மண்டித்தெரு, மார்க்கெட் பகுதியிலுள்ள மொத்த விற்பனைக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடந்த ஆண்டுதான் சிரிஞ்சு சாக்லேட்டுகள் விற்பனைக்கு வந்ததாகவும், தற்போது இந்த வகையான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வருவதில்லை எனவும் வியாபாரிகள் கூறினர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அவர்களிடம், இதுபோன்ற அபாயகரமான திண்பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

a924dfc8 c04f 4f6a 9abe 75222ed77271 - 2026

தொடர்ந்து, அனைத்து மொத்த விற்பனைக் கடைகளிலும் சோதனை நடத்தினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”இதுபோன்ற சாக்லேட்டுகள் வேலூரில் தயாரிக்கப்படுவதில்லை.

சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து விற்பனைக்கு வருகின்றன. சாக்லேட் க்ரீம் அடைத்து வைத்திருக்கக்கூடிய சிரிஞ்சுகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடியவை இல்லை.

அவற்றில் அளவீடுகள், ஊசி பொருத்துவதற்கான முனைகளும் கிடையாது. இந்த சிரிஞ்சிகள் சாக்லேட் வைப்பதற்காக மட்டும் தனியாக தயாரிக்கப்பட்டவைதான்.

எனினும், இத்தகைய சாக்லேட்டுகளை விற்பனைக்குக் கொண்டுவரக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories