December 8, 2025, 11:11 AM
25.3 C
Chennai

ஊசி சிரிஞ்சில் விற்கப்பட்ட சாக்லேட் க்ரீம்! அதிகாரிகள் சோதனை!

chocolate - 2025

வேலூர் மாநகரத்திலுள்ள கடைகளில், ஊசி போடுவதற்காக பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளில், சாக்லேட் க்ரீம் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன.

இந்த சிரிஞ்சுகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்திரசேனா தலைமையிலான அலுவலர்கள் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறைப் பகுதிகளிலுள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் சிரிஞ்சியில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

chocolate 2 - 2025

இவ்வகையான சாக்லேட்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என பெட்டிக்கடை வியாபாரியிடம் விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலூர் மார்க்கெட் பகுதியிலுள்ள மொத்த விற்பனைக் கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லாங்கு பஜார், மண்டித்தெரு, மார்க்கெட் பகுதியிலுள்ள மொத்த விற்பனைக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடந்த ஆண்டுதான் சிரிஞ்சு சாக்லேட்டுகள் விற்பனைக்கு வந்ததாகவும், தற்போது இந்த வகையான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வருவதில்லை எனவும் வியாபாரிகள் கூறினர்.

அவர்களிடம், இதுபோன்ற அபாயகரமான திண்பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

a924dfc8 c04f 4f6a 9abe 75222ed77271 - 2025

தொடர்ந்து, அனைத்து மொத்த விற்பனைக் கடைகளிலும் சோதனை நடத்தினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”இதுபோன்ற சாக்லேட்டுகள் வேலூரில் தயாரிக்கப்படுவதில்லை.

சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து விற்பனைக்கு வருகின்றன. சாக்லேட் க்ரீம் அடைத்து வைத்திருக்கக்கூடிய சிரிஞ்சுகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடியவை இல்லை.

அவற்றில் அளவீடுகள், ஊசி பொருத்துவதற்கான முனைகளும் கிடையாது. இந்த சிரிஞ்சிகள் சாக்லேட் வைப்பதற்காக மட்டும் தனியாக தயாரிக்கப்பட்டவைதான்.

எனினும், இத்தகைய சாக்லேட்டுகளை விற்பனைக்குக் கொண்டுவரக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories