காதலி பெற்ற குழந்தையை ஏமாற்றி விற்ற காதலன்!

baby-1
baby-1

திருவண்ணாமலை வந்தவாசி அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றி குழந்தை விற்பனையில் ஈடுபட்ட காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பவானியும், அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவரும் 7 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை வேறு நபரிடம் கொடுத்துவிட்டு முறைப்படி நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சரத்குமார் பவானியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உறவினருக்கு குழந்தையை கொடுப்பதாக பவானியை நம்ப வைத்து சரத்குமார் குழந்தையை எடுத்து சென்றுள்ளார்.

பின்னர் பவானியை திருமணம் செய்துக்கொள்ளாமல் கடந்த 13ம் தேதி திருப்போரூரை சேர்ந்த வேறு பெண்ணை சரத்குமார் திருமணம் செய்துள்ளார்.

இதனையறிந்த பவானி வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறை விசாரணையில் சரத்குமார் வந்தவாசி பெரிய காலனியை சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மாள் ஆகியோரிடம் குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

அங்கிருந்து அந்த குழந்தை ஈரோடு பகுதியை சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி ஆகியோரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் சரத்குமார், வந்தவாசி ஏழுமலை, ஈரோடு பகுதியை சேர்ந்த நந்தினி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் பவானியிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories