தமிழகத்தில் மின்வெட்டு வர வாய்ப்பில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி!

minister senthilbalaji - 2026
மதுரை திருப்பரங்குன்றத்தில் மின்சாரம் விநியோகம் பராமரிப்பு குறித்து நடைபெற்ற ஐந்து மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை: தமிழகத்தில் மின்வெட்டு வர வாய்ப்பில்லையென, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், ஐந்து மாவட்ட மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் கூறியது…

தமிழகத்தில், மழைகாலங்களில் மின் சப்ளைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை மின்வாரியத் துறையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். மக்களின் தேவைக்கு ஏற்ப, மின் சப்ளையை தடையின்றி வழங்க அரசானது, துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது, மக்களிடையே மின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும், மின்சார வாரிய அலுவலர்கள் அனைவரும் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்த அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும்.

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை நாம் சிக்கனமாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மின்சாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர் மற்றும் ஐந்து மாவட்ட மின்வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories