மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம்! சிபிசிஐடி., போலீஸ் விசாரிக்கக் கோரி மனு!

madurai collector office - 2026

மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் சி.பி.சி. ஐ. டி. போலீஸ் விசாரிக்க கோரி வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல். முத்துக்குமார். இவர், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், மதுரை ஆயுத படை குடியிருபில்யில் இயங்கி வரும் இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. 

முதியோர் இல்லத்தை பெயரளவில் நடத்தி வந்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை நம்ப வைத்து இரண்டு மாநில அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை இந்த சிவகுமார் என்பவர் பெற்றுள்ளார். இந்த விருது பெறுவதற்கும் அவர் ,காவல் துறையுடன் இணைந்து ஆதரவற்ற பிரதேங்களை அடக்கம் செய்வது போல் பல்வேறு புகைப்படங்களை தாக்கல் செய்துள்ளார். 

கொரோனா பேரிடர் கால சூழ்நிலையை இவர் தவறாக பயன் படுத்தி குழந்தைகள் இறந்து விட்டதாக நாடகமாடி போலி அரசு ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளை விற்று மோசடி செய்துள்ளார்கள். ஆகவே, இதனை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாக கையாள வேண்டும். பல வருடங்களாக திட்டமிட்டு முதியோர், நலிவுற்றோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்னும் பெயரில் போலியாக ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளை கடத்தி விற்று வந்துள்ளார்கள்.

இவர்களின் பின்னால் பெரிய குழந்தைகள் கடத்தும் கும்பல் செயல் பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் குழந்தைகளை விற்பனை செய்திருக்கலாம். காlப்பாக பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தற்போது, இரண்டு குழந்தைகள் மட்டுமே கண்டுபிக்க பட்டுள்ள நிலையில் மீதி பதினாறு குழந்தைகளின் நிலை மர்மமாக உள்ளது. 

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குழந்தைகள் கடத்தி விற்பனை சம்பந்த பட்ட வழக்கில் உள்ளூர் போலீசார் இன்னும் முக்கிய குற்றவாளி சிவகுமாரை கைது செய்ய வில்லை. அவர் ,வெளி மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம். எனவே ,இவ்வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரிப்பதில் சிரமம் உள்ளதால் ,சி. பி. சி. ஐ. டி போலீஸ் விசாரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

மனுவை பெற்று கொண்ட கலெக்டர். உரிய நடவடிக்கைகாக அனீஸ்சேகர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories