மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம்! சிபிசிஐடி., போலீஸ் விசாரிக்கக் கோரி மனு!

madurai collector office - 2026

மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் சி.பி.சி. ஐ. டி. போலீஸ் விசாரிக்க கோரி வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல். முத்துக்குமார். இவர், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், மதுரை ஆயுத படை குடியிருபில்யில் இயங்கி வரும் இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. 

முதியோர் இல்லத்தை பெயரளவில் நடத்தி வந்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை நம்ப வைத்து இரண்டு மாநில அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை இந்த சிவகுமார் என்பவர் பெற்றுள்ளார். இந்த விருது பெறுவதற்கும் அவர் ,காவல் துறையுடன் இணைந்து ஆதரவற்ற பிரதேங்களை அடக்கம் செய்வது போல் பல்வேறு புகைப்படங்களை தாக்கல் செய்துள்ளார். 

கொரோனா பேரிடர் கால சூழ்நிலையை இவர் தவறாக பயன் படுத்தி குழந்தைகள் இறந்து விட்டதாக நாடகமாடி போலி அரசு ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளை விற்று மோசடி செய்துள்ளார்கள். ஆகவே, இதனை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாக கையாள வேண்டும். பல வருடங்களாக திட்டமிட்டு முதியோர், நலிவுற்றோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்னும் பெயரில் போலியாக ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளை கடத்தி விற்று வந்துள்ளார்கள்.

இவர்களின் பின்னால் பெரிய குழந்தைகள் கடத்தும் கும்பல் செயல் பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் குழந்தைகளை விற்பனை செய்திருக்கலாம். காlப்பாக பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தற்போது, இரண்டு குழந்தைகள் மட்டுமே கண்டுபிக்க பட்டுள்ள நிலையில் மீதி பதினாறு குழந்தைகளின் நிலை மர்மமாக உள்ளது. 

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குழந்தைகள் கடத்தி விற்பனை சம்பந்த பட்ட வழக்கில் உள்ளூர் போலீசார் இன்னும் முக்கிய குற்றவாளி சிவகுமாரை கைது செய்ய வில்லை. அவர் ,வெளி மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம். எனவே ,இவ்வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரிப்பதில் சிரமம் உள்ளதால் ,சி. பி. சி. ஐ. டி போலீஸ் விசாரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

மனுவை பெற்று கொண்ட கலெக்டர். உரிய நடவடிக்கைகாக அனீஸ்சேகர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories