December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

முட்புதரில் 12 வயது சிறுமியின் சடலம்: உடலெங்கும் கடித்து, கல்லால் அடித்து கொன்ற சிறுவனின் கொடூரம்!

murdered - 2025

எந்நேரமும் ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு ஆபாச படங்களுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான 17வயது சிறுவன் 6ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை கொடூரமாக கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வந்த 11சிறுமியின் தந்தை அதே பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். ஊரடங்கினால் வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்த அந்த சிறுமியை, மின் கட்டணம் செலுத்த சென்ற தாய் உடன் அழைத்து சென்றுள்ளார்.

மின்கட்டணம் செலுத்திவிட்டு திரும்பி வரும்போது, மகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கோழிக்கறி கடைக்கு சென்றிருக்கிறார் தாய்.

பின்னர் நெடு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த வீட்டில் மகள் இல்லாதை கண்டு தேடியிருக்கிறார். அதற்குள் அவரது கணவரும் வந்திருக்கிறார்.

murder 1 - 2025

எங்கு தேடியும் மகள் கிடைக்காத நிலையில் சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்த பொதுமக்களும் ஒரு பக்கம் தேடிவந்துள்ளனர். அப்போது சிறுமியின் வீட்டு அருகே உள்ள புதர்க்காட்டில் உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமியிடன் உடல் கிடந்திருக்கிறது.

தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ நடந்த இடத்தில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் காட்டிய செல்போன் சிக்னலை வைத்து அந்த நம்பரை வைத்து தேடியதில் 17 வயது ஐஐடி மாணவன் சிக்கினான்.

முதலில் தனக்கும் சிறுமியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொன்ன சிறுவன், செல்போன் என்ணை காட்டி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறான். தனியாக வந்த சிறுமியை பேச்சுக்கொடுத்து புதர் பக்கம் அழைத்துவந்துவிட்டேன். சந்தோசமாக இருக்க முயற்சி செய்தேன். அதற்கு சிறுமி சம்மதிக்கவில்லை. அதனால் தலையில் கல்லால் அடித்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

தலையில் பலமாக அடிபட்ட சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்த அந்த கொடூர சிறுவன், சிறுமியின் உடலில் பல இடங்களில் கடித்து வைத்திருக்கிறான். உயிர் பிழைத்தால் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று முழுவதுமாக அடித்து கொலை செய்திருக்கிறான்.

Acoust - 2025

தற்போது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர், சிறுவன் செய்த கொடூரங்கள் என்னென்ன என்பதை ஆதாரப்பூர்வமாக வைத்து அவன் மீது மேலும் பல வழக்குகள் பதியப்படும் என்கிறனர் போலீசார்.

பெற்றோர் இல்லாததால், உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த சிறுவன், கஞ்சாவுக்கும் ஆபாச படங்களுக்கும் அடிமையாகி இப்படி ஒருகாரியத்தை செய்திருப்பதாக சொல்கின்றனர் அப்பகுதியினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories