கூவறது பஞ்சு மிட்டாய் வியாபாரம்.. விற்றதோ கஞ்சா! வளைத்துப் பிடித்த போலீஸ்!

Cannabis1 - 2026

பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்வது போல் கஞ்சா வியாபாரம் செய்த வடமாநிலத்தவர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கஞ்சா தொடர்பாக இரட்டைக்கொலை அரங்கேறியது .

இதனையடுத்து மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என எஸ்.பி பத்ரிநாராயணன் எச்சரித்தார் .

இதனையடுத்து கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு சிறிய கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மெகா கஞ்சா வியாபார கும்பல் சிக்கியது. இதில் தில்லி ஆக்ராவை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா (வயது 39).

இவர் தூத்துக்குடியில் திருமணம் முடித்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டாக கன்னியாகுமரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்துள்ளார்.

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்வது போல் சென்று கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Cannabis - 2026

இதனையடுத்து அவர் தங்கியிருந்த வடக்கு குண்டல் பகுதிக்கு கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் விற்பனைக்காக 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட கொட்டாரத்தை சேர்ந்த சாமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் தப்பி ஓடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories