December 6, 2025, 4:03 AM
24.9 C
Chennai

கூவறது பஞ்சு மிட்டாய் வியாபாரம்.. விற்றதோ கஞ்சா! வளைத்துப் பிடித்த போலீஸ்!

Cannabis1 - 2025

பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்வது போல் கஞ்சா வியாபாரம் செய்த வடமாநிலத்தவர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கஞ்சா தொடர்பாக இரட்டைக்கொலை அரங்கேறியது .

இதனையடுத்து மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என எஸ்.பி பத்ரிநாராயணன் எச்சரித்தார் .

இதனையடுத்து கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு சிறிய கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மெகா கஞ்சா வியாபார கும்பல் சிக்கியது. இதில் தில்லி ஆக்ராவை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா (வயது 39).

இவர் தூத்துக்குடியில் திருமணம் முடித்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டாக கன்னியாகுமரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்துள்ளார்.

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்வது போல் சென்று கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Cannabis - 2025

இதனையடுத்து அவர் தங்கியிருந்த வடக்கு குண்டல் பகுதிக்கு கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் விற்பனைக்காக 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட கொட்டாரத்தை சேர்ந்த சாமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் தப்பி ஓடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories