மும்பை: இனி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வீரர்கள், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடக் கூடாது என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, கிரிக்கெட் வீரர்களிடம் மைதானத்தில் எல்லைக்கோடின் அருகில் இருக்கும் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவது வெகு சாதாரணம். ஆனால் இனி அவ்வாறு ஆட்டோகிராப் வாங்க முடியாது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரி கே. எஸ். மாதவன் கூறுகையில், வீரர்கள் ஐபிஎல், போட்டிகளில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் சூதாட்டத்துக்கு வழி வகுக்கும் என்றார்.
விளையாடும்போது ஆட்டோகிராஃப் போடக்கூடாது: கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு
Popular Categories


