தினகரன் அலுவக எரிப்பு கைதி அட்டாக் பாண்டி மனு; சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவு!

madurai high court
madurai high court
  • தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு!
  • கைதி அட்டாக் பாண்டி தாயாரை பார்க்க 10 நாட்கள் அவசர விடுப்பு கோரி மனு!
  • சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள அட்டாக் பாண்டி, உடல் நலம் முடியாத தாயாரை பார்க்க 10 நாட்கள் அவசர விடுப்பு கோரி மனு விசாரணையில், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மனு தாரர் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் உத்தரவு.

சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் மனைவி தயாள் தாக்கல் செய்த மனு: அதில்,தினகரன் எரிப்பு வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அட்டாக் பாண்டி ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
தற்பொழுது, எனது கணவரின் தாயாரான ராமுத்தாய் உடல் நலம் முடியாமல் உள்ளார்.

எனது கணவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவசர விடுப்பு வழங்க மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.

எனவே, தாயாரை பார்க்க வேண்டி எனது கணவரான பாண்டிக்கு 10 நாட்கள் அவசர விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி, அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு குறித்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் மனுதாரர் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்த உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26- ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories