December 6, 2025, 6:51 AM
23.8 C
Chennai

ஓடும் ரயில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தல்!

13 June 29 Chennai train
13 June 29 Chennai train

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் விருத்தாச்சலத்தை அடுத்து வந்த போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த அந்த இளம்பெண் திடீரென எழுந்து அலறல் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த ரயிலில் பயணித்த இளைஞர்கள் எழுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த முதியவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

உடனடியாக அந்த முதியவர் எழுந்து வேகமாக ஓடி கழிவறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.

கடந்த ஒரு மணி நேரமாக, ரயிலில் பயணித்த இளைஞர்கள் கதவை தட்டியும் அந்த முதியவர் கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து இளைஞர் ஒருவர் ரயிலில் எழுதப்பட்டிருந்த புகார் எண்ணை தொடர்புகொண்டு ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், போலீசார் அந்த முதியவர் கழிவறையில் ஒளிந்திருக்கும் பெட்டியில் ஏறி கதவைத் தட்டி அவரை கீழே இறக்கி உள்ளனர்.

ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் அந்த நபரை தாக்க முயற்சி செய்தனர் ஆனால் போலீசார் அதனை தடுத்து இவர் மீது கண்டிப்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அந்த முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவில் ஓடும் ரயிலில் முதியவர் செய்த இந்த செயலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories