வக்கீல் எனக்கூறி இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடிய இஸ்மாயில்!

Ismail - 2026

திருச்சி மாவட்டம், பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவர், தனது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றியிருந்திருக்கிறார்.

இவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்காக பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இவருக்குப் பெண் தருவதாக ஒரு குடும்பத்தினர் முடிவுசெய்து, அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அவர்களது குடும்ப நண்பரான வழக்கறிஞர் கங்காதரனை அணுகியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கங்காதரன், இஸ்மாயில் குறித்து விசாரித்துள்ளார். அதில், இஸ்மாயில் மீது 18 லட்ச ரூபாய் மோசடி வழக்கு ஒன்று இருப்பதும், அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் வழக்கறிஞர் கங்காதரன், திருச்சி செஷன்ஸ் கோர்ட் நீதிமன்றக் காவல்துறையில் இஸ்மாயில் மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், குளித்தலை தொகுதியில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு வழக்கறிஞர் முன்பு பணியாற்றியிருந்தார்.

அதே வழக்கறிஞர் கும்பகோணம் பகுதியிலும் பணியாற்றிவந்த நிலையில், அவருடைய பெயரை முகமது இஸ்மாயில் பயன்படுத்தி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

மேலும், அவரிடம் முறையான எந்த ஒரு உரிமமும் இல்லாததால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories