காணாமல் போன சிறுமி! அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்!

vankodumai 1 - 2026

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நபருடைய 15வயது மகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனதால் சிறுமியின் தந்தை அவரை தேடி வந்துள்ளார்.

மேலும் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மகளை கீழ்ப்பாக்கம் தாமோதரன் மூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பியதாகவும் பின் மகளைக் காணவில்லை எனவும் அந்த வீட்டிற்குச் சென்று விசாரித்ததில் சிறுமி வேலைக்கு வரவில்லை என தெரிந்ததாகவும் கூறி கடந்த 19 ஆம் தேதி கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமி பெரும் மன உளைச்சலில் சித்த பிரம்மை பிடித்ததைப் போல் அதிர்ச்சியில் இருந்ததைக் கண்ட தந்தை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சிறுமியை வீட்டிற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி தனது தந்தை சேர்த்து விட்ட வேலையைப் பார்க்கப்பிடிக்காமல் இருந்து வந்ததாகவும், அதனால் கோபித்துக்கொண்டு இதற்கு முன் தாங்கள் குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதி வீட்டருகே இருக்கும் புருஷோத்தமன் ஜனா என்பவரின் வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அங்கு குடியிருந்தபோது தன்னிடம் தந்தை போன்று பழகிவந்த புருஷோத்தமன் ஜனா-விடம் தனது தந்தை வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி வீட்டில் தனியாக தங்க பயமாக இருப்பதால் 2 நாட்கள் இங்கு தங்கிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், அதற்கு அவர் அனுமதி அளிக்க அங்கு தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

மேலும், அவரின் வீட்டில் தங்கிய தன்னை புருஷோத்தமன் ஜனா 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதையடுத்து தான் பயந்து அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், புருஷோத்தமன் ஜானா-விற்கு தெரிந்த மேலும் இருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி காவலாளி புருஷோத்தமன் ஜனா-வை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புருஷோத்தமன் ஜனா அளித்த தகவலை வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேலும் இருவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கிரீம்ஸ் சாலையைச் சேர்ந்த அருண் குமார் என்பது தெரிய வரவே அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories