காணாமல் போன சிறுமி! அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்!

vankodumai 1 - 2026

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நபருடைய 15வயது மகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனதால் சிறுமியின் தந்தை அவரை தேடி வந்துள்ளார்.

மேலும் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மகளை கீழ்ப்பாக்கம் தாமோதரன் மூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பியதாகவும் பின் மகளைக் காணவில்லை எனவும் அந்த வீட்டிற்குச் சென்று விசாரித்ததில் சிறுமி வேலைக்கு வரவில்லை என தெரிந்ததாகவும் கூறி கடந்த 19 ஆம் தேதி கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமி பெரும் மன உளைச்சலில் சித்த பிரம்மை பிடித்ததைப் போல் அதிர்ச்சியில் இருந்ததைக் கண்ட தந்தை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சிறுமியை வீட்டிற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி தனது தந்தை சேர்த்து விட்ட வேலையைப் பார்க்கப்பிடிக்காமல் இருந்து வந்ததாகவும், அதனால் கோபித்துக்கொண்டு இதற்கு முன் தாங்கள் குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதி வீட்டருகே இருக்கும் புருஷோத்தமன் ஜனா என்பவரின் வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அங்கு குடியிருந்தபோது தன்னிடம் தந்தை போன்று பழகிவந்த புருஷோத்தமன் ஜனா-விடம் தனது தந்தை வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி வீட்டில் தனியாக தங்க பயமாக இருப்பதால் 2 நாட்கள் இங்கு தங்கிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், அதற்கு அவர் அனுமதி அளிக்க அங்கு தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் வீட்டில் தங்கிய தன்னை புருஷோத்தமன் ஜனா 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதையடுத்து தான் பயந்து அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், புருஷோத்தமன் ஜானா-விற்கு தெரிந்த மேலும் இருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி காவலாளி புருஷோத்தமன் ஜனா-வை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புருஷோத்தமன் ஜனா அளித்த தகவலை வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேலும் இருவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கிரீம்ஸ் சாலையைச் சேர்ந்த அருண் குமார் என்பது தெரிய வரவே அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories