December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

காணாமல் போன சிறுமி! அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்!

vankodumai 1 - 2025

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நபருடைய 15வயது மகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனதால் சிறுமியின் தந்தை அவரை தேடி வந்துள்ளார்.

மேலும் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மகளை கீழ்ப்பாக்கம் தாமோதரன் மூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பியதாகவும் பின் மகளைக் காணவில்லை எனவும் அந்த வீட்டிற்குச் சென்று விசாரித்ததில் சிறுமி வேலைக்கு வரவில்லை என தெரிந்ததாகவும் கூறி கடந்த 19 ஆம் தேதி கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமி பெரும் மன உளைச்சலில் சித்த பிரம்மை பிடித்ததைப் போல் அதிர்ச்சியில் இருந்ததைக் கண்ட தந்தை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சிறுமியை வீட்டிற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி தனது தந்தை சேர்த்து விட்ட வேலையைப் பார்க்கப்பிடிக்காமல் இருந்து வந்ததாகவும், அதனால் கோபித்துக்கொண்டு இதற்கு முன் தாங்கள் குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதி வீட்டருகே இருக்கும் புருஷோத்தமன் ஜனா என்பவரின் வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அங்கு குடியிருந்தபோது தன்னிடம் தந்தை போன்று பழகிவந்த புருஷோத்தமன் ஜனா-விடம் தனது தந்தை வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி வீட்டில் தனியாக தங்க பயமாக இருப்பதால் 2 நாட்கள் இங்கு தங்கிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், அதற்கு அவர் அனுமதி அளிக்க அங்கு தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் வீட்டில் தங்கிய தன்னை புருஷோத்தமன் ஜனா 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதையடுத்து தான் பயந்து அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், புருஷோத்தமன் ஜானா-விற்கு தெரிந்த மேலும் இருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி காவலாளி புருஷோத்தமன் ஜனா-வை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புருஷோத்தமன் ஜனா அளித்த தகவலை வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேலும் இருவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கிரீம்ஸ் சாலையைச் சேர்ந்த அருண் குமார் என்பது தெரிய வரவே அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories