ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரம் திகில் படம்.. பீதியில் மாணவி தற்கொலை!

rakshana - 2026

ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் கடந்த ஒரு வருடமாக செல்போனில் திகில் படம் பார்த்து வந்த 14 வயது சிறுமி, மனஅழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் நகருக்கு உட்பட்ட ஓரிக்கை வேளிங்கப்பட்டரை கலைஞர் தெரு சின்னசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கோட்டீஸ்வரன்- கீதா தம்பதியர்.

கோட்டீஸ்வரன் பாரத் ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு ரக்ஷனா என்ற 14 வயது மகளும் தர்மேஷ் என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

செவிலிமேடு பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ரக்ஷனா தற்போது 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் ரக்ஷனா ஆன்லைன் வழி கல்வியே பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1 வருடமாக வீட்டிலேயே ஆன்லைன் மூலம் கல்வி பயில்வதும் மற்ற நேரங்களில் திகில் திரைபடங்களை பார்ப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தனக்கு பயமாக இருப்பதாகவும், அமானுஷ்யம் தொடர்பாக கனவுகள் வருவதாகவும் ரக்ஷனா தனது பெற்றோர்களிடம் கூறி வந்ததாக குடும்பதார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரக்ஷனா தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர் படுக்கை அறைக்கு சென்றபோது ரக்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது ரக்ஷனா ஏற்கெனவே உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து சிறுமி தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories