December 6, 2025, 2:10 AM
26 C
Chennai

ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரம் திகில் படம்.. பீதியில் மாணவி தற்கொலை!

rakshana - 2025

ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் கடந்த ஒரு வருடமாக செல்போனில் திகில் படம் பார்த்து வந்த 14 வயது சிறுமி, மனஅழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் நகருக்கு உட்பட்ட ஓரிக்கை வேளிங்கப்பட்டரை கலைஞர் தெரு சின்னசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கோட்டீஸ்வரன்- கீதா தம்பதியர்.

கோட்டீஸ்வரன் பாரத் ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு ரக்ஷனா என்ற 14 வயது மகளும் தர்மேஷ் என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

செவிலிமேடு பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ரக்ஷனா தற்போது 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் ரக்ஷனா ஆன்லைன் வழி கல்வியே பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1 வருடமாக வீட்டிலேயே ஆன்லைன் மூலம் கல்வி பயில்வதும் மற்ற நேரங்களில் திகில் திரைபடங்களை பார்ப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தனக்கு பயமாக இருப்பதாகவும், அமானுஷ்யம் தொடர்பாக கனவுகள் வருவதாகவும் ரக்ஷனா தனது பெற்றோர்களிடம் கூறி வந்ததாக குடும்பதார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரக்ஷனா தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர் படுக்கை அறைக்கு சென்றபோது ரக்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது ரக்ஷனா ஏற்கெனவே உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து சிறுமி தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories