தன் பேச்சால் எல்லோரையும் ஆனந்த படுத்திய தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு!

anandha kannan
anandha kannan

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும், சினிமா நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம் அடைந்தார்.

சிங்கப்பூர் தமிழரான இவர், சன் டிவியில் சிந்துபாத் என்ற நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தனியார் இசை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில், குழந்தைகள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக திகழந்தார்.

ஆனந்த கண்ணன் மறைவுக்கு, திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ,”சிறந்த நண்பரும், சிறந்த மனிதருமான ஆனந்த கண்ணன் இன்று இல்லை. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும். எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

புற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன், உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார். ஆனந்த கண்ணனின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது திடீர் மரணம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிங்கப்பூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவை மிகவும் நேசித்த அவர், எப்போதும் இந்தியா வருவதை விரும்புவதாக ஆனந்த கண்ணன் ஒரு நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.

குடும்பத்தை பற்றிய தகவல்களை பெரிதாக பகிர்ந்து கொள்ளாத அவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு வளர்ப்பு மகனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழ் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருந்த அவர், தன்னுடைய குடும்பத்திற்காகவே மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பங்கேற்காதபோதும், அவருக்கான தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ananda kananan 1
Ananda kananan 1

நாட்டுபுறக்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், பலருக்கு அது தொடர்பான பயிற்சிப் பட்டறைகளின் மூலம் பயிற்சி கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளர் பணியை விட வருமானம் குறைவாக இருந்தாலும், நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி அவருக்கு கூடுதலான மன நிம்மதியை அளித்ததாக அவர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories