தன் பேச்சால் எல்லோரையும் ஆனந்த படுத்திய தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு!

anandha kannan
anandha kannan

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும், சினிமா நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம் அடைந்தார்.

சிங்கப்பூர் தமிழரான இவர், சன் டிவியில் சிந்துபாத் என்ற நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தனியார் இசை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில், குழந்தைகள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக திகழந்தார்.

ஆனந்த கண்ணன் மறைவுக்கு, திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ,”சிறந்த நண்பரும், சிறந்த மனிதருமான ஆனந்த கண்ணன் இன்று இல்லை. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும். எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

புற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன், உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார். ஆனந்த கண்ணனின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது திடீர் மரணம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

சிங்கப்பூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவை மிகவும் நேசித்த அவர், எப்போதும் இந்தியா வருவதை விரும்புவதாக ஆனந்த கண்ணன் ஒரு நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.

குடும்பத்தை பற்றிய தகவல்களை பெரிதாக பகிர்ந்து கொள்ளாத அவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு வளர்ப்பு மகனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழ் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருந்த அவர், தன்னுடைய குடும்பத்திற்காகவே மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பங்கேற்காதபோதும், அவருக்கான தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ananda kananan 1
Ananda kananan 1

நாட்டுபுறக்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், பலருக்கு அது தொடர்பான பயிற்சிப் பட்டறைகளின் மூலம் பயிற்சி கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளர் பணியை விட வருமானம் குறைவாக இருந்தாலும், நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி அவருக்கு கூடுதலான மன நிம்மதியை அளித்ததாக அவர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories