நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா இதில்..?

Published:

current cut 1
current cut 1

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஆக.23) முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக திங்கள் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் லட்சுமிபுரம் பகுதி: லட்சுமிபுரம், திருமால்நகர், சந்திரன் நகர், பெரியார் தெரு, நியூ தெரு, நாகப்பா நகர், அம்பேத்கார் நகர் மற்றும் வி.ஒ.சி தெரு.ஐடி கோரிடர் பகுதி :சிப்காட், தாழம்பூர் கிராமம், நத்தம் கிராமம், சக்தி நகர், நத்தம் ரோடு, ஏகாட்டூர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அடையார் பகுதி: பெசன்ட் நகர் ருக்மணி ரோடு, பீச் ரோடு, நவபாரத் காலனி பார்வதி தெரு, எம்.ஜி.ஆர் ரோடு சாஸ்திரி நகர் நேதாஜி தெரு, என்.எஸ்.கே தெரு, முத்துலட்சுமி சாலை வேளச்சேரி சாரதி நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.’

காலை பணிக்கு செல்லும் நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தம் தொடர்வதால் அதற்கு முன்பாகவே மின்சாரம் சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img